உணவே மருந்தென வாழ்ந்த தமிழ்குடியின் இன்றைய பரிதாபங்கள்

126

காளையை வாழ வைத்து நாமும் நன்றாக வாழ்ந்த காலம் போய் சர்வதேச கலப்பட சமையல் எண்ணெய் வியாபார மோசடியில் சிக்கித் தவிக்கிறோம். மீள்வீர்களா??…

சூரிய காந்தி விதை உற்பத்தியே இல்லாமல் சாகசம் படைக்கும் எண்ணெய் உற்பத்தி கம்பெனிகள்.

100% பெட்ரோலிய கழிவுகளே சூரியகாந்தி எண்ணெய்.

. தேங்காய் விலை உயர்வு…

எள் விலை உயர்வு…

கடலை விலை உயர்வு… சூரியகாந்தி விதை உற்பத்தி மிக மிக மிக குறைவு…

இதனால் எண்ணெய் விலைகள் கடும் விலை உயர வேண்டும்

🌾🌾ஆனால் அப்படி உயராமல் விலை

குறைவாகதான் இருக்கும்…

காரணம் என்ன..?????

💻ஒரு சிறிய பார்வை….

ஒரு லிட்டர் கடலைஎண்ணெய் தயாரிக்க சுமார் மூன்று கிலோ விதை தேவைப்படும்.

நிலக்கடலை கிலோ ரூ70*3kg=Rs210

எள் கிலோ ரூ90*3kg=Rs 270

சூரியகாந்தி விதை ரூ55*3kg=Rs 165

மேலே சொன்ன விலை ஒரு கிலோவுக்கு என்றாலும் ஆட்கள் சம்பளம், கரண்டு பில்,கழிவு,வட்டி, லாபம் கணக்கிட்டால் விலை எங்கே போகும்!?.

💣இப்படி விலை பிரச்சனையால் எல்லா

இடத்திலும் ஒரு தந்திரத்தனம் கலப்பபடம் உருவாகிறது.

அதனால் மனித இனத்திற்கே

கேள்விக்குறி ஆகிறது?!

எப்படி?!…

அதிர்ச்சி…???!!!

💣வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய இன்டஸ்ட்ரியல் கழிவு Liquid Paraffin

திரவ நிலை மெழுகு லிட்டர் ரூபாய் 12 க்கு பெறப்படுகிறது.

அதை இங்கு கூலிங்பிராசஸ் செய்து லிட்டர் ரூபாய் 30க்கு எண்ணெய் தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.

💣இதை இறக்குமதி செய்வது எப்படி…???

“பாமாயில்” என்கிற பெயரில் இங்கு வருகிறது.

பால்ம் என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாமாயில் உண்மையில் மிகவும் நல்ல

எண்ணெய் தான்.

பனை மரம்,பேரீச்சமரம் போன்று பால்ம் ஒரு சிறந்த மரம்.

💣ஆனால் உலகம் முழுவதும் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்ய இயலுமா?

அந்த அளவு பால்ம் மரங்கள் உள்ளதா?!

சூரிய காந்தி எண்எணய் வியாபாரம் தமிழகம் உட்பட பாரதம் முழுவதும் விற்பனை ஆகிறது.

அதற்கு ஏற்ப சூரியகாந்தி சாகுபடி தோட்டங்கள் உள்ளதா?..

இல்லையே…!!

250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில்

50 ml சன்பிளவர் ஆயில்தான் கிடைக்கும்.

125 கோடி மக்களுக்கு சன்பிளவர் ஆயில் தயாரிக்க எங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?!

அதுபோலதான் பாமாயிலும்…

சரி.

நன்றாக போய் கொண்டு இருந்த நேரத்தில் நாம்

நல்லெண்ணை,

கடலை எண்ணெய்,

தேங்காய் எண்ணெய்

பயன் படுத்தி வந்தோம்.

இதயத்தை பாதுகாக்க

சூரியகாந்தி எண்ணெய் என்று நமக்கு பொய் சொல்லி, விளம்பரம் செய்து நம்மை ஏமாற்றியதை நாம் அறிந்தோமா!?

உண்மையில் கொழுப்பு

சத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும்.

ஒரு மிருகத்தில் இருந்து எடுக்கப்படும் நெய்யே,

நமக்கு நன்மை தந்தால்,

ஒரு இயற்கையான தாவரத்தில் இருந்து கிடைக்கும் எண்ணை நமக்கு செரிமானம் ஆகாதா!?

சிந்தனை செய்யுங்கள் மக்களே!!!

பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு, குழந்தை பாக்கியம் இன்மை, ஆண்மைகோளாறு,

சிறு வயதிலேயே வயதுக்கு வருதல், கேன்சர், சிறு வயதில் சர்க்கரை நோய் போன்ற அனைத்து வராத நோய் வந்த பிரச்சனைக்கும் காரணம் பாழாய் போன சன் பிளவர் ஆயில் வந்த பிறகுதானே!!!!.

எண்ணெயை தொட்டுப் பாருங்கள்.

அது பச பசன்னு கிரீஸ் மாதிரி இருக்கும்…

எள், நிலக்கடலை, தேங்காய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில்

கந்தகமும்,

பெட்ரோலிய கழிவுகளும், அதே எண்ணெய் போல தயாரித்த வாசனைகளும் கலந்தால் நம் உடல் என்னவாகும்!?

மனிதச் செயலா இது?!

கொலை பாதக செயல்…

நூடில்ஸ் மோசடியை விட இது கோடிக்கணக்கான மடங்கு விஷக் கொலைச் செயல்.

எனக்கு தெரிந்தவரை எண்ணெய் கலப்படம் முன்பு பெரிய எண்ணெய் மில் முதலாளிகள் 10:1 என்ற அடிப்படையில் கலப்படம் செய்துவந்தனர். 10லிட்டர் நல்ல எண்ணெய்யில் 1 லிட்டர் மெழுகு எண்ணெய் ஆகும்.

அப்படின்னா விலை குறைவாக விற்கப்படும் எண்ணெய்கள் மட்டுமே கலப்படமா ?.

இல்லை விலை குறைவாக விற்கப்படும் எண்ணெய் மற்றும் ₹.200 மேல் விற்கும் எண்ணெயிலும் கலப்படம் செய்து விற்பனை செய்கின்றர்.

🏇 மரச் செக்கு எண்ணையே நிரந்தர தீர்வு.

விதை என்பது விஷம்.

விஷ முறிவு செய்ய கருப்பட்டி சேர்த்தால் மட்டுமே விஷ முறிவு செய்யப்பட்டு நல்லதொரு எண்ணெயாக உங்களுக்கு கிடைக்கும். நாட்டு சர்க்கரை சேர்ப்பது 100% ஆரோக்கியம் என்று சொல்ல இயலாது.

அதே நேரத்தில் பனை மரமே ஏறாமல் கள்ளக் கருப்பட்டி உருவாவதும் கடும் சோகம்தான்.

தனி மனித மாற்றமே நம் சமுதாய மாற்றம்.

உழவே தலை.

Balasubramania T