அம்பாறை மாவட்டத்தில் எமது ஆலயங்களின் புனித சூழலை நாசமாக்கும் விசமிகளின் இனவாத சேட்டை மீண்டும் அரங்கேறியது!!!
#வீரமுனை #கண்ணகியம்மன் ஆலயம்
வைகாசி மாதம் பிறந்தாலே
கிழக்கிழங்கையில் கண்ணகி திருவிழாக்கள் பிரபலமானது .இதில் எமது அம்பாரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் கண்ணகி தாய் வீற்றிருக்கின்றார். வைகாசி குளிர்த்தி விழா முன்னிட்டு ஒவ்வொரு ஊர் இளைஞர்களால் ஆலய சூழல்களை சுத்தமாக்கும் பணிகள் ஆங்காங்கே காரைதீவு,கல்முனை,வீரமுனைகளில் தொடர்கின்றது ,
வைகாசி குளிர்த்தி விழா ஒவ்வொரு வருடம் போல விமர்சியாக இடம்பெறாவிடினும் மட்டுப்படுத்தவாறு சடங்குகள் இடம்பெறும் என்பதற்கமைய தற்போது அகோரமான வெப்பநிலை ,கொரோனா தொற்று போன்றவற்றில் எம்மக்களை பாதுகாக்க கண்ணகித்தாயை வேண்டி திருவிழா உருகி மன்றாடும் அளவு பல ஆலயங்களில் வழிபடுகின்றார்கள்.
ஆனால் ஆலயங்களின் புனித சூழலை நாசமாக்கி எல்லையுள்ள ஆலயங்களை அகற்றவே தொடர்ச்சியாக எமது மதத்தை கேவலப்படுத்தும் செயற்பாடுகள் ஒரு சில முஸ்லிம் இனவாதிகளால் இடம் பெற்றுவருகின்றது,
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயம் சூழல் இரு நாட்கள் முன் அதே போன்று காரைதீவு ஆலயம் என இந்த வரிசையில் வீரமுனை கண்ணகி கோயில் சூழலில் மாடுகளை சாப்பிட்டு அந்த கழிவுகளை வீசி தாங்கள் மிருகப்புத்தி போன்றவர்கள் எனும் ஈனத்தனமாக காட்டியுள்ளார்கள்,
இதற்கு முதலும் இவ்வாறான சம்பவங்கள் வீரமுனை கிராமத்தில் சம்மாந்துறை சில காடையர்களினால் நடைபெற்றுள்ளது..
பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இருப்பினும் எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாக எமக்கு தெரியவில்லை… மேலும் பிரதேச சபையினால் மாட்டுக் குப்பைகள் கொட்டப்படுவதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.. ஆனாலும் பிரதேச சபையின் சட்டத்தை மதியாது ஒரு சில முஸ்லிம் விசமிகள் சமூக ஒற்றுமைகளை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில்
ஒரு மதஸ்தலத்தின் முன்பாக இவ்வாறான அசிங்கமான காரியங்களை செய்துவிட்டு போயிருக்கின்றனர்… என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்…
இவ்வாறான விசமிகளை இனங்கன்டு கைது செய்ய வேண்டும் எனவும் அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்….
உடனடியாக சம்மந்தப்பட்ட
அதிகாரிகள் இதற்குரிய
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்…