நாடாளுமன்றை கதறவிட்ட இரண்டு குரல்கள்!

46

நீண்ட காலத்தின்பின் எங்கள் தரப்பிலிருந்து நாடாளுமன்றில் ஓங்கியொலித்து, ஆங்கிலம் தெரியாத எழுபது வீதமான சிங்கள உறுப்பினர்களை கதறவிட்டுக்கொண்டிருக்கும் துடிப்புள்ள இரு குரல்களை இந்த ஆட்சிக் காலத்தில் காண்கிறோம்.

  1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
  2. சாணக்கியன்

இவர்கள் இருவரதும் பாராளுமன்ற பேச்சுக்களை கேட்கும்போது, பேச்சாற்றல் என்பது எவ்வளவு பொக்கிஷமானது என்பதை உணரமுடிகிறது. காத்திரமான கருத்துக்கள்; ஆணித்தனமான எடுத்துரைப்புக்கள்.

ஆம் முன்னணியும் கூட்டமைப்பும் தனித்தனியே இயங்குங்கள். இருமுனைகளில் இருந்து பேச்சு ஆயுதத்தால் அவர்களை தினம்தினம் கதறவிடுங்கள். அப்போதுதான் சரத் பொன்சேகா போன்ற ஓநாய்களை ஆடென்று நம்பிய நம்மவர் புத்திக்கு செருப்படி கிடைக்கும்.