பிரித்தானியாவிவில் கடந்த 24 மணி நேரத்தில் (07/04/2020) கொரோனா வைரஸ் தாக்கி 854 மரணங்கள் பதிவாகியுள்ளதாக NHS தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து பிரித்தானியாவின் மொத்த இறப்புகள் 6,227 ஆக அதிகரித்துள்ளது. அறிவிக்கப்பட்ட 854 மரணங்களில் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 96 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
As of 9am 7 April, 266,694 tests have concluded, with 14,006 tests on 6 April.
213,181 people have been tested of which 55,242 tested positive.
As of 5pm on 6 April, of those hospitalised in the UK who tested positive for coronavirus, 6,159 have sadly died. pic.twitter.com/MB1ckbNjm7
— Department of Health and Social Care (@DHSCgovuk) April 7, 2020
நேற்று (06/04/2020) அறிவிக்கப்பட்ட 437 பேரின் இறப்பு எண்ணிக்கையில் இருந்து கிட்டத்தட்ட இன்றைய எண்ணிக்கை இரு மடங்காகும். எதிர் வரும் வாரங்களில் பரவுகையும், மரணங்களும் உச்சமடையலாம் எனவும்,குறிப்பாக ஈஸ்டரை அண்மித்த ஏழு நாட்கள் உச்சமாக இருக்கும் எனவும் மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர்.