தமிழீழ தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு Positive Network Center,Mitcham CR4 3JR என்னும் இடத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 6.00 மணிக்கு இடம்பெற்றது.
முதலில் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்களால் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.
தனது வாழ்க்கையை, தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த பாலா அண்ணாவின் வாழ்க்கைப் பயணத்தையும், தமிழ் மக்களின் விடுதலைக்கான தனது பயணத்தில், தனது வாழ்க்கைத் துணையையும் பங்காற்ற வைத்த அவரது முழுமையான தேசப்பற்றுதலையும், புலம்பெயர்ந்து வாழும் இளைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் உரைகளும் பாலா அண்ணாவின் நினைவு நாளில் முன்வைக்கப்பட்டன.
தேசத்தின் குரல் பாலா அண்ணனின் சாதனைகள் பற்றிய நினைவு மீட்டல் உரைகளும் வழங்கப்படடன.நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் மாலை 8.30 மணிக்கு இனிதே நிறைவுபெற்றன.
தகவல் + படங்கள் : அசோக்