6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும்

69

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை, மார்ச் 30 திங்கள் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன.

இந்த கிராமங்களுக்கு எவரும் உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ அரசால் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது என இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது