தாமதமாகும் ஶ்ரீலங்கா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய மீள்திறப்பு

56
[poll id= “2”]

ஶ்ரீலங்கா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திறக்கப்படமாட்டாது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஓகஸ்ட் 15ஆம் திகதி விமான நிலையத்தை முழுமையாக திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அரசு அறிவித்துள்ளது, ஓகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் சுற்றுலாப்பயணிகள் ஶ்ரீலங்கா வருவதற்கு வருவதற்கு இதுவரையில் பதிவு செய்துள்ளனரெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.