சிறிலங்காவை நோக்கி படையெடுக்கும் இலட்ச கணக்கான வண்ணத்துப் பூச்சிகள்

147

சிறிலங்காவில் அடையாளம் காணப்படாத லட்ச கணக்கிலான வண்ணத்து பூச்சிகள்பொலநறுவை, வெலிகந்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு லட்ச கணக்கிலான வண்ணத்து பூச்சுகள் மரங்கள் மற்றும் பயிர் செய்கைகள் முழுவதும் மூடியுள்ளது எனவும் அத்துடன் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமம் படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த வண்ணத்துபூச்சிகள் சிலவற்றை பிடித்த விவசாயிகள் அதனை போத்தல் ஒன்றுக்குள் போட்டு அது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட சேதம் போன்று இந்த வண்ணத்துபூச்சிகளினாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் உடனடியாக பரிசோதனை நடத்துமாறு விவசாய துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான இந்த வண்ணத்து பூச்சிகள் பயிர் செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.