ஈழ இனப்படுகொலையும் திமுகவின் வரலாறு காணாத துரோகமும்

ஈழத்தில் 2009ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது தமிழகத்தில் உள்ள தமிழர்கள் தங்களுக்காக எதுவும் செய்யவில்லை என்ற தவறான அபிப்பிராயம் ஒன்று சில ஈழத்தமிழர்களிடம் இருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் உண்மையில் தமிழகத்தில் அப்போது எப்படியான சூழல் நிலவியது என்பதையும், அதை அவர்கள் எவ்வாறெல்லாம் எதிர்கொண்டார்கள் என்பதையும் பல்வேறு நண்பர்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்தப் பதிவு. இது அந்தச் சூழலின் மிகச்சிறிய ஒரு பகுதிதான்.

தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

போராட்டங்களுக்கு காவல்துறை முற்றிலும் அனுமதி மறுத்தது.

“போரை நிறுத்த வேண்டும்” என்று துண்டறிக்கை கொடுத்ததற்காக பதின்மூன்று பேர் பேர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்கள். நன்றாக கவனிக்கவும், போரை நிறுத்த வேண்டும் என்ற துண்டறிக்கைக்காக கைது செய்யப்பட்டார்கள்.

இலங்கை /தமிழீழம் /புலிகள் முத்துக்குமார் போன்ற வாசகங்கள் அடங்கிய எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை தமிழக அரசு விதித்திருந்தது. இதை மீறி அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த உடனடியாக மூடப்பட்டதுடன் வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டன.

தமிழக கடற்கரை ஓரங்கள் அனைத்தும் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு கடலைத்தாண்டி எந்த விதமான பொருட்களும் கொண்டு போவது முற்றிலும் தடுக்கப்பட்டது.

அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்களை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்கள் மேல் பொய்
வழக்க்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

தமிழீழம் தொடர்பான குறுந்தகடுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய குறுந்தகடுகளை நகல் எடுப்பவர்கள் கூட காவல்துறையால் தாக்கப்பட்டார்கள். சிலரைக் கைதும் செய்தார்கள்.

“போரை நிறுத்த வேண்டும்” என தொடர்ந்து போராடிய சென்னை வழக்கறிஞர்களை காவல்துறை கடுமையாக தாக்கியது. நீதிபதி மண்டையில் இருந்தும் இரத்தம் கொட்டியது. வழக்கறிஞர்கள் இரத்தம் சொட்டச்சொட்ட அங்கிருந்து விரட்டப்பட்டார்கள்.

அப்போது ஒட்டப்படும் சுவரொட்டிகளை தமிழக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள். சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும், ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

தமிழீழப் படுகொலையை கண்டித்து, தமிழக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய்
வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என திமுக ஊடகங்களில் செய்தி வெளியிட்டன. பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

இரண்டாவதாக தீக்குளித்த பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும், உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது தமிழக அரசு.
இது பொய்யான தகவல் என்பதற்காவே அரசைக் கண்டித்து சில இடங்களில் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

வே.பிரபாகரன் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தது தமிழக அரசு. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வரைந்து வைத்திருந்த சுவரெழுத்துகளில் கூட பிரபாகரன் படம் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது.

மூன்றாவது வேதனை தாங்காமல் மாண்ட சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது.

அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி தமிழக அரசு நெருக்கடி கொடுத்தது.

தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என தமிழக அரசு சிறப்புச் சட்டம்
கொண்டுவந்து.

போர்காட்சிகளை வெளியிடலாம் என மதுரை உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு
வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தின் எந்த அச்சகங்களிலும் அச்சடிக்கவில்லை. மறைமுகமாகவே மட்டுமே ஆங்காங்கு மிக குறைந்த அளவில் இவை அச்சடிக்கப்ப்ட்டன.

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும்,தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்று எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று
நடத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை.

தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் பேசியதற்காக கொளத்தூர்மணி,மணியரசன், சீமான் கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில். பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர்
தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும்,அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.

நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் கூட திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

சோனியா காந்திக்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்தார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து
பொய் வழக்கில் சிறையில் அடைத்தது தமிழக அரசு.

மறைந்த முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும் மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

கல்லூரிகள்,மாணவர் தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது

போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்பட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.

2009 மே மாதம் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தார்கள்.

ஈழத்தில் போர் நடக்கும் போது அங்கு 420,000 மக்கள் இருக்கிறார்கள் என அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சொல்லிகொண்டிருந்த போது பிரணாப் மட்டும் 70,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக சென்னையிலும், பிற ஊர்களிலும் பொய்ப்பிரச்சாரம் செய்தார். இதற்கு திமுக உறுதுணையாக இருந்தது.

தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை. க. அருணபாரதி, த.தே.பொ.க.34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் – குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை தமிழக காவல்துறை ரிமாண்ட செய்தது.