சிங்களப் பேரினவாதிகள் வடக்கு-கிழக்கு தமிழர்களை முஸ்லிம்களுடன் முடிஞ்சுவிடுகிற வேலையைப் பார்க்க அந்தரப்படுகிறார்கள்.
அதன் வெளிப்பாடே இது.
தீவிரவாதி சஹ்ரான் தலைமையில் கோத்தாவால் திட்டமிடப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு துணைபோன எவரும் இதுவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதனை ஆதாரமாக வைத்து இதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை
வளர்த்துவிட்டவர்களே பேரினவாதச் சிங்களவர்களே.
யாழ் நூலக எரிப்பிலிருந்து தமிழின படுகொலைகள்வரை முஸ்லிம் தீவிரவாதிகளை இந்தப்பேரினவாதிகள் பயன்படுத்தியே வந்தனர்.
சிறுதொகைப் பணங்களுக்காவும்,
சலுகைகளுக்காவும் விலைபோன முஸ்லிம் இளைஞர்கள் இதற்கு எடுபட்டனர். ஆனால் பெரும்பான்மையான படித்த முஸ்லிம் சமூகத்தினர் இதனை எதிர்த்தனர்.
தமிழர்களின் இனவழிப்பிற்கு எதிராக குரல்கொடுத்தனர்.
சில இளைஞர் யுவதிகள் இறுதிப்போர்வரை புலிகளின் படையணிகளிலும் நின்று களமாடினர்.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி கோத்தபாயவே தீவிரவாதி சஹ்ரானை பாகிஸ்தானுக்கு அனுப்பி பயிற்சியளித்து முஸ்லிம் தீவிரவாதத்தை சிறிலங்காவில் இறக்குமதி செய்த அயோக்கியன்.
முஸ்லிம் சமூகம் இதனை உணர்ந்துகொண்டு சிங்களப் பேரினவாத சக்திகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு எடுபடாமல் தமிழர்களுடன் ஒற்றுமையாக நல்லெண்ணத்துடன் பழகி வாழ்வதே அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தும். தமிழக முஸ்லிம் உறவுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
கீழுள்ள படத்தைப் பார்த்து எமக்கு கோபம் வரவில்லை.
உங்கள் அறியாமையை நினைத்து பரிதாபமே மேலிடுகிறது.
(மீண்டும் மீண்டும் விலைபோன அடிமைச் சகதிக்குள் முஸ்லிம் சமூகம் தள்ளப்படுகிறது.)
-சினைப்பர்.