அசுத்தமான உணவுகளில் இருந்து உருவாகும் வயிற்றுப்போக்கு மற்றும் உயிர்கொல்லி நோயான புற்றுநோய் உட்பட 200 நோய்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுகளின் படி அசுத்தமான உணவை உட்கொள்வதால் உலகளாவிய ரீதியில் ஆண்டு ஒன்றுக்கு நான்கு இலட்சம் பேர் உயிரிழக்கின்றமை தெரியவந்துள்ளது.
மிகவும் ஆபத்தான விடயம் என்னவொன்றால் நோய்வாய்ப்படும் குழந்தைகளில் 125,000 பேர் ஆண்டு ஒன்றில் உயிரிழக்கின்றனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் சுகாதார உணவுகளை வழங்குவதில் சவாலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், கோவிட் 19 போன்ற நோய் தொற்றுக்கள் பரவி வரும் தற்போதைய தருணத்தில் மேலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.