பிரான்சில் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகளை இத்தாலி எல்லைக்கு அடித்து சென்ற வெள்ளம்!

369

பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியங்களை சூறையாடிவரும் அலெக்ஸ் புயல், புதைக்கப்பட்ட சடலங்களையும் விட்டு வைக்கவில்லை.

Alpes-Maritimes மாவட்டத்தில் உள்ள இடுகாடு ஒன்றை மொத்தமாக வழித்து துடைத்து தரைமட்டமாக்கியுள்ளது இந்த அலெக்ஸ் புயல்.

கன மழையால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு பல்வேறு சடலங்களை சவப்பெட்டியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளது.

புயல் கரையைக் கடந்து இரண்டு நாட்கள் ஆனதின் பின்னர் இத்தாலியின் எல்லைக்கரையில் பல்வேறு சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக இன்று (05/10/2020) அப்பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.