பிரான்சில் அடுத்த இரண்டு வாரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

110

மக்களை எச்சரிக்கும் சுகாதார அமைச்சர்!

பிரான்சில் அடுத்த இரண்டு வாரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அதிகமானோர் சேர்க்கப்படலாம் என்பதால், நாட்டு மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் Olivier Veran கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே பிரான்சில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 8,550 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம், ஒவ்வொரு நாளும் சராசரியாக 55 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் பொருள் நம் நாட்டில் மாதத்திற்கு சராசரியாக 1,500-2,000 பேர் ஐ.சி.யூ பிரிவில் சேர்க்கப்படுகின்றனர் என்பது ஆகும் என சுகாதார அமைச்சர் Olivier Veran கூறியுள்ளார்.

மேலும், அவர் அடுத்த இருவாரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். தீவிர சிகிச்சைப் பிரிவில் நிறைய நபர்கள் அனுமதிக்கப்படலாம். பிரான்ஸில் பொதுமுடக்க தளர்வால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரான்ஸ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவுடன் எதிராக போராட வேண்டும். மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்க காலக்கட்டத்தில் 4,000 என்ற அளவில் பிரான்ஸில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டனர்.

ஆனால் இப்போது மீண்டும் பிரான்ஸில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் பல மாதங்கள் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.