ஏற்கனவே பிரான்சில் பலதார மணம் தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் அது இன்னும் பிரெஞ்சு மண்ணில் உள்ளது. பிரிவினைவாதத்திற்கு எதிரான தனது மசோதாவில், நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களிடமிருந்து தங்குமிட அனுமதியை திரும்பப் பெற அரசாங்கம் முன்மொழிகிறது.
பலதார மணம் குடியரசின் மதிப்புகளுக்கு முரணானது என்று குடியுரிமை அமைச்சர் மார்லின் ஷியாப்பா இன்று அக்டோபர் 5 திங்கள், BFM தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய போது. “மத பிரிவினைவாதத்திற்கு” எதிரான மசோதாவில் உள்ள நடவடிக்கைகளில் ஒன்றை விவரித்தார்,
ஜெரால்ட் டர்மனின் [உள்துறை அமைச்சர், ஆசிரியர் குறிப்பு] மற்றும் நான் இந்த நடவடிக்கையை சட்டத்தில் சேர்ப்பேன், இதன் பொருள் இனிமேல் நாங்கள் ஒரு வெளிநாட்டிலிருந்து வந்துள்ள ஒரு பலதார மணம் புரிந்த நபருக்கு குடியிருப்பு அனுமதி வழங்க மாட்டோம் என அவர் அறிவித்தார். ஆனால் இந்த சட்டம் ஏற்கனவே 1993 முதல் உள்ளது.
பலதார மணம் புரிந்த நபரின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை திரும்பப் பெறவும், அவரை வெளியேற்றவும் நாங்கள் முன்மொழிகிறோம்.
சிவில் கோட் பிரிவு 147 ஆல் பிரான்சில் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் பலருடன் திருமணம் செய்து கொள்ளப்பட்ட நிகழ்வுகள் உள்ளது என்று மார்லின் ஷியாப்பா அழுத்தமாக தெரிவித்தார்.