பிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா?

118

வெளியான உண்மை தகவல்

பிரான்சில் பீட்டா கொரோனா வைரஸ் மாறுபாடு தீவிரமாக பரவி வரும் நிலையில், அது பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் பரவி, அது வெவ்வேறு வகையில் உருமாறி தீவிரமாக பரவி வருகிறது.

அப்படி பரவும் ஒவ்வொரு கொரோனா வைரஸிற்கும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்ட பெயர் வைத்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கு டெல்டா என்பது போல் உலகில் உருமாறி கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸிற்கு ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதன் படி பீட்டா என்ற கொரோனா வைரஸ் பிரான்ஸ் முழுவதும் தீவிரமாக பரவி வருவதால், பயணக்கட்டுப்பாடுகள் மிகவும் முக்கியம், இது பிரித்தானியாவுக்கு ஒரு அச்சுறுத்தல் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த வெள்ளிக் கிழமை முதல், பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு திரும்புவோர் 10 நட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஏனெனில், பிரான்சில் பீட்டா வகை கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாக இருப்பதால், இந்த நடவடிக்கை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அமைச்சர்கள் கூறியிருந்தனர்.

London School of Hygiene and Tropical Medicine பேராசிரியரும், அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான John Edmunds, கடைசி நிமிடத்தில், பிரித்தானியாவில் பயண விதி மாற்றங்கள் கொண்டு வந்தது குறித்து கூறியுள்ளார்.

பிபிசி ரேடியோ 4 டுடே நிகழ்ச்சியில் பேசிய அவர், பீட்டா மாறுபாடு முழுவதும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இது தற்போது பிரித்தானியாவில் பரவி வரும் டெல்டா மாறுபாட்டைக் காட்டிலும் குறைவான பரவலைக் கொண்டுள்ளது.

இது ஒரு நல்ல விஷயம் தான், இருப்பினும், இந்த வைரஸ் எங்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. இது தீவிரமானால் கட்டுப்படுத்துவது சிரமம் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த பீட்ட வகை கொரோனா வைரஸை, AstraZeneca தடுப்பூசி சிறப்பாக தடுப்பதாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து சான்றுகள் வருகின்றன.

பிரித்தானியாவில் சமீபத்திய மாதங்களில் மில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கப்படும் நான்கு அங்கீகரிப்பட்ட தடுப்பூசிகள், Oxford/AstraZeneca தடுப்பூசியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.