எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு- பதுளை இடேயேயான தேனுவாரா மெனிக்கே மற்றும் கொழும்பு-காங்கேசன்துறை (Intercity AC) ரயில் என்பன அன்று சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புகையிரத சேவைகள் வழக்கமான கால அட்டவணையில் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனிமேல் நடைமுறையில் இருக்காதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் முற்பதிவு நடைமுறை தொடரும் என ரயில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.