தமிழ்தேசிய கொள்கைக்கான இளைஞர்கள் பெண்களுக்கான வாக்குகளுக்காக வாக்களியுங்கள் என நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய மகளிர் கூட்டமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.

தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழ் அரசுக் கட்சியில் இருந்து அன்மையில் வெளியேற்றப்பட்ட மகளிர் அணியினரே இதனை ஆரம்பித்துள்ளார்கள்.
அவர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை இடம்பெற்ற இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2020 தொடர்பிலான பெண்களுக்காகவும் உங்களுக்காக இணைவோம் என்ற தொனிப்பொருளில் பெண்களின் சமூக பொருளாதார அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து பெண் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கருத்து பகிர்வின் போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..

இதுவரைகாலமும் மக்கள் ஏமாந்தது போதும் இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து வாக்களிக்காமல் விடவேண்டாம் கட்டாயம் அனைத்து பெண்களும் சரியானவர்களை தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும் தமிழ் தேசிய அரசியலை நீக்கம் செய்யும் எந்த கட்சிகளுக்கும் வாக்களிக்க கூடாது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, முதியவர்களுக்கு, மற்றும் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது தமிழ்த் தேசியக் கொள்கையில் மக்களுக்காக எந்த கட்சி செயல்படுகின்றதோ அந்த கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு, புதியவர்களுக்கு, பெண்களுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
இக் கருத்துப் பகிர்வில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கற்றவையும் கற்றுக்கொள்ள வேண்டியவை தொடர்பில் திருமதி கிருத்திகா தர்மராஜாவும், தமிழ் மக்களுக்கான சமூக அரசியல் நகர்வுகளும் பெண்களின் பங்களிப்பு குறித்து திருமதி மகேஸ்வரி ஸ்ரீஸ்கந்தராஜாவும்
காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளின் தீர்வுக்கான வழி முறைகளில் பெண்களின் பங்களிப்பு குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜராகவும், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் உழைக்கும் பெண்களின் பங்கு குறித்து உழைக்கும் மகளிர் சங்கத்தின் தலைவி திருமதி கலைச்செல்வி பத்மநாதன் கருத்துரை வழங்கினார்கள்.
வட மாகாணத்தைச் சேர்ந்த மகளிர் அபிவிருத்தி நிலையம் மகளிர் ஐக்கிய நாணய சங்கம், மாதர் கிராம முன்னேற்ற சங்கம், உழைக்கும் மகளிர் அமைப்புகள், மகளிர் அமைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த பல பெண்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமையுடன்.
ஆளுமையான கெட்டித்தனமுடையவரும் பெண்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் தமிழ் தேசியக் கொள்கை உடைய ஒருவரையும் அதில் விருப்பு வாக்கில் பெண்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்றும். கட்டாயம் அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.