கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பகிஷ்கரிப்பை அறிவித்தோம். பகிஷ்கரிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எமது இயக்கத்தில் இருக்க முடியாது. என அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்.
தனியார் வானொலி ஒன்றுக்கு இன்று வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலேயே மணிவண்ணன் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்த பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் .
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பகிஷ்கரிப்பை அறிவித்திருந்தோம். பகிஷ்கரிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எமது இயக்கத்தில் இருக்க முடியாது. அது கொள்கை சார்ந்தது. எமது அந்த கொள்கையில் யாரும் கை வைக்க முடியாது. அப்படி கை வைக்க முயல்வார்கள் எமது கட்சிக்குள் இருக்க முடியாது.
பூகோள அரசியலில் பேரம் பேசலுக்கான வாய்ப்பை உருவாக்காமல், அவை சாத்தியமில்லை என யாரும் கூறினால் அவர்களுக்கு எமது இயக்கத்திற்குள் இடமில்லை.
இரு தேசம் ஒரு நாடு அரசியல் சூழலில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதெல்லாம் எமது கொள்கைகள். அதை விட மாற்று நிலைப்பாட்டை முன்வைப்பவர்கள்தாராளமாக வெளியில் சென்று தனது கொள்கையுடன் ஒத்தவர்களுடன் சேர்ந்து இயங்கலாம்.
வெளியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் தரப்பு, ஈபிடிபி, அங்கஜன் தரப்பு எல்லாம் அந்த நிலைப்பாட்டுடன் தான் இருக்கின்றார்கள். அவருடன் சேர்ந்து செயல்படலாம் என தெரிவித்தார்.