கருணாவால் தடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

வடக்குகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் உறவுகள் ஆர்ப்பாட்டம் இன்று (27/07/2020) செங்கல்லடி சந்தியில் நடைபெற இருந்தது.

இது கொரோனா தொற்று சட்ட நடைமுறைக்கு அமைய போலீசாரிடம் அனுமதியும் பெற்று, 100 பேருக்கும் குறைவானவர்கள் என்ற போலீசாரின் நிபந்தனைக்கு ஏற்பவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் பெரும்பாலும் கருணா மாற்றும் பிள்ளையான் குழுவினரால் பாதிக்கப்பட்ட தாய்மாரும் உறவுகளுமே கூடி தமது ஆதங்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.

இதை அறிந்த கருணா, ஏறாவூர் காவல்துறை அதிகாரியை தூண்டி, ஏறாவூர் காவல்துறை ஊடாக இவ் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

இத்தடைவுத்தரவை காட்டி, கூடியிருந்த உறவுகளை மிரட்டி, ஏறாவூர் காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டாளர்களை வரும் 12ம் திகதி நீதிமன்றில் சமூகமளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.