இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 14 ஆவது பிரதமராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றுள்ளார்.
களனி ரஜமஹா விகாரையில் பதவியேற்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ தற்போது பிரதமராக பதவிப் பிரமானம் செய்துள்ளார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ பிரதமாராகப் பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.