மன்னாரில் வீடு மீது குண்டு தாக்குதல் – ஒருவர் படுகாயம்

150

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (17) வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டு குண்டு தாக்குதலின் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

வீட்டின் முன் பகுதியில் இரவு 9.45 மணியளவில் மதிலினால் நாட்டு குண்டு ஒன்றை வீட்டு வளாகத்தினுள் எறியப்பட்டுள்ளது.

-இதன் போது குறித்த குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்ததில் -இரண்டு பிள்ளைகளின் தந்தையான சேமாலை சந்தியோகு(வயது-56) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-இந்த நிலையில் நேற்று இரவு பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டதோடு,இன்று சனிக்கிழமை காலை விடுசட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸார் குறித்த வீட்டிற்குச் சென்று விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.