பினைமுறி காரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நேர்ந்த அதே விடயம் 20வது திருத்தத்தின் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் தவிர்க்க முடியாமல் நடக்கும் என்று சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (23) சமகி ஜன பலவேகய கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.