தமிழ்த்தேசிய
தலைமைகளை புறக்கணித்தீர்கள்…
தமிழ்த்தேசிய ஆளுமைகளை அலட்சியம் செய்தீர்கள்…
தமிழ்த்தேசிய கருத்தாளர்களை கலங்கம் செய்தீர்கள்
தமிழ்தேசிய அறிவுஜீவிகளை இருட்டடிப்பு செய்தீர்கள்.தமிழ்த்தேசிய ஊடகவியலாளர்களின் தடத்தை அழித்தீர்கள்.உங்களுக்கு முகம் கிடைத்தது என்பதற்காக முகம் தெரியா எத்தனையோ ஊடக உழைப்பாளர்களை அலட்சியம் செய்தீர்கள்.பட்டியல் ஏராளம்.
நாங்கள் ஏதுமே எழுதவில்லை.
இப்போதும் உங்களுக்காக வருந்தி நிற்கின்றோம். கையறு நிலையில்.
ஏழை சொல் அம்பலம் ஏறுமா என்ற ஏக்கத்தில்…ஏழைகளாக்கியதே நீங்கள்தான் என்ற போதும்..உங்களுக்காக வருந்துகின்றோம்.
யாரை தாங்கிப்பிடித்தீர்களோ-அவர்களே
இன்று…ஒன்றும் சொல்வதற்கில்லை.
– பா.ஏகலைவன்