தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இன்று அஞ்சலி செலுத்திய முன்னணியினர்!

378

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்ற பெற்றமையினை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அஞ்சலி நிகழ்வினை முன்னணியினர் நடத்தி இருந்தார்கள்.

நல்லூரின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தியாகச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

மேலும் பலர் மலர் அஞ்சலியினை செலுத்தினர் அஞ்சலி நிகழ்வில் வேட்பாளரான செல்வராஜா கஜேந்திரன், கனகரட்ணம் சுபாஷ், திருமதி வாசுகி சுதாகர், நடராஜா காண்டீபன், டிலான் பத்மநாதன் ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும் செயற்பாட்டாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.