இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில் 2020 – வாக்களிப்பு வீதம்!

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணி முதல் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய இன்று காலை 10 மணி வரையில் கொழும்பு மாவட்டத்தில் 20 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாத்தளையில் 25 வீதமும்,

கேகாலையில் 23 வீதமும்,

இரத்தபுரியில் 23 வீதமும்,

திகாமடுல்லையில் 6 வீதமும்

குருணாகலில் 25 வீதமும்

களுத்துறையில் 20 வீதமும்,

கண்டியில் 25 வீதமும்

நுவரெலியாவில் 25 வீதமும்,

மாத்தறையில் 25 வீதமும்,

யாழ்ப்பாணத்தில்ம் 20 வீதமும்,

புத்தளத்தில் 15 வீதமும்,

பதுளையில் 25 வீதமும்,

மட்டக்களப்பில் 17 வீதமும்,

திருகோணமலையில் 30 வீதமும்,

காலியில் 20 வீதமும்,

ஹம்பாந்தோட்டையில் 24 வீதமும்,

கம்பஹாவில் 18 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

💥தற்போது கிடைக்க பெற்ற தகவல்கள் படி நாடு முழுவதும் 45 வீதமான வாக்குகள் பதிவாகின.