கடல் கடந்த பறவைகள்
தினம் கண்ணீர் விடும் பறவைகள்
தாய்த் தேசம் தள்ளி வந்து
தினம் தவிக்கின்ற பறவைகள்
தாயவளின் பாசம் இல்லை
தாய்மொழிக்கோ மதிப்பு இல்லை
தோழனவன் தோள்களில்லை
துயரம் சொல்ல நாதியில்லை
செல்வமீட்ட சென்றுள்ளான் என்று
சிலர் அங்கே சொல்லிடலாம்
செத்து செத்து வாழும் வாழ்க்கை
சிலருக்கேனும் தெரிந்திடுமோ?
நோய்கள் வந்து நோகும் வேளை
நெஞ்சம் தொட கைகளில்லை
நினைவால் வரும் மழைக்கு மட்டும்
நித்தம் இங்கே பஞ்சமில்லை..!!
பிரதி sajee.k