பளை வைத்தியசாலையில் நோயாளிகள் திண்டாட்டம், வைத்தியர்களும் ஊழியர்களும் கொண்டாட்டம்!

57

கிளிநொச்சி – பளை பிரதேச வைத்தியசாலையில் நோயாளிகள் வெளியே காத்திருக்க வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நோயாளர்கள் வைத்தியசாலையில் காத்திருக்க நேர்ந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த 7ம் திகதி இடம்பெற்றிருக்கின்றது. குழந்தை பிறந்து 45நாட்களான தாயார் ஒருவர் ஒரு மாத குழந்தையுடன் வருகை தந்துள்ளார். இவர் உடல் சோர்வான நிலையில் வந்துள்ளார். இவரை சோதித்த கடமையில் இருந்த வைத்தியர் அவரை இரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறியுள்ளார்.

அதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவும் 09/09/2020 வரும் எனவும் கூறியுள்ளனர். அதன் பின் அந்த தாயார் மருந்தெடுப்பதற்காக சென்ற போது மருந்தகத்தில் மருந்து வழங்குனர் நீண்ட நேரமாக இல்லை.

வைத்தியசாலை கடமையில் உள்ள வைத்தியர் உட்பட அனைத்து ஊழியர்களும் வைத்தியசாலையின் மேற்பகுதியில் சக ஊழியரின் பிறந்த தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

என கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலம் தெரியவந்தது.

அதன் பின் அந்த தாயாரின் கணவர் வைத்தியரை சந்திக்க சென்றபோது மேலே செல்ல அனுமதி இல்லை என பாதுகாப்பு உத்தியோகத்தரால் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கீழே நின்று வைத்தியரை அழைக்குமாறு காவலாளியடம் கூறியுள்ளார்.

அந்த தாயாரின் கணவரை வெளியில் பிடித்து விடும்படியும் இல்லாவிடில் பொலீசாருக்கு தகவல் கொடுத்து வெளியேற்றும்படியும் மேலிருந்தவாறு வைத்தியர் காவலாளிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நோயாளர்களையும் காத்திருக்க வைத்து பிற்ந்தநாளை கொண்டாடிய வைத்தியர், அதை கேட்க சென்ற பொதுமக்களையும் அவதூராக பேசி வீண் பழிகள் போட்டதுடன் தாதி இரத்தப் பரிசோதனையை தறவாக செய்தததாக ஏற்கனவே ஒருவர் வாதாடியதாகவும் கதை ஒன்றை சோடித்துள்ளார்.

இதையடுத்து அங்கு மீண்டும் வருகை தந்த அந்த குடும்பத்தாருடன் வைத்தியர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த கணவர் பத்திரிகையாளராக கடமையாற்றுகிறார் என்பதை அறிந்த வைத்தியர் அவரை அந்த வைத்தியசாலையில் உள்ள பெண்களை வீடியோ பதிவு எடுப்பதற்கு வந்தீர்களா? என்று அவதூறாக கேள்வி எழுப்பியுள்ளதுடன் அங்கு வந்திருந்த போக்குவரத்து பொலீசாரிடம் வைத்தியசாலையுள்ள தாதியார்களையும் தன்னையும் ஊடகவியலாளர் என அடையாளபடுத்தி அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அந்த ஊடகவியலாளரின் ஊடக அடையாள அட்டை பரிசோதித்துள்ளார்.

எனினும் அதற்கு பதிலளித்த அவர் தான் பத்திரிகையாளர் என்ற வகையில் வரவில்லை பொதுமகனாக கேட்கிறேன் கடமை நேரத்தில் பிறந்ததின கொண்டாட்டம் தேவையா என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.