பிரித்தானியாவில் இன்று முதல் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இரண்டு வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது 6 பேர் கொண்ட குழு பொது இடங்களில் மற்றும் தங்கள் வீடுகளில் சந்திக்க இன்று (மார்ச் 29) முதல் அனுமதிக்கப்படுகிறது. எச்சரிக்கையாக இருக்குமாறு போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தல்.
ஹாப்பி திங்கள் என்று அழைக்கப்படும், இன்று தொடக்கம் லாக் டவுன் இலகுவாக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. இன்றோடு 2 குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சந்தித்துக் கொள்ளலாம். மேலும் இன்னும் 14 நாட்களில்(ஏப்பிரல் 12)தொடக்கம் லாக் டவுன் மேலும் இலகுவாக்கப்படுகிறது. முடி வெட்டும் நிலையம்,ஜிம்,உள்ளக விளையாட்டு என்று பல வியாபார நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் 60 மில்லியன் மக்களில்,சுமார் 30 மில்லியன் மக்களுக்கு முதல் கட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டது.
இதனால் கொரோனா தொற்று விகிதம் 40% சத விகிதத்தால் சரிந்துள்ள நிலையில். கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் மட்டுமே இறந்துள்ளார்கள் என்றும். சுமார் 3,200 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டதாகவும் சுகாதார துறை அறிவித்துள்ளது.பிரான்ஸ்,ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் இன்றுவரை பெரும் திண்டாட்டத்தில் உள்ளது. அவர்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகள் இருந்தும்.
அவர்கள் அதனை உரிய நேரத்தில் அனைவருக்கும் போடவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.அந்த வகையில் பிரித்தானியாவின் NHS சேவை கடு கதி வேகத்தில்,ஊசிகளை போட்டுத்தள்ளியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள் உள்ளிட்ட வெளிப்புற விளையாட்டு வசதிகளும் மீண்டும் திறக்கப்படுகின்றன. மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்ற வெளிப்புற விளையாட்டுக்களையும் மீண்டும் தொடங்க இன்று முதல் அனுமதிக்கப்படும். முடிந்தவரை வீட்டிலிருந்து அதிக தூரத்துக்கு செல்வதை தவிர்க்கவும்,Work from Home செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், எல்லோரும் தொடர்ந்து விதிகளை கடைபிடிக்க வேண்டும், கைகள் கழுவுவதையும், முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அழைக்கும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறிய போரிஸ் ஜோன்சன்,மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
-ஈழம் ரஞ்சன்-