பிரித்தானியாவில் பதறவைக்கும் இறப்புகளின் எண்ணிக்கை மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 91,470 ஆக உயர்ந்தது.பிரித்தானிய அரசு இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா வைரஸ் தொற்றி 28 நாட்களுக்குள் மேலும் 1,610 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக மொத்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 91,470 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் 8,267 பேர் பலியாகி உள்ளார்கள். இறப்புகள் விகிதம் சென்ற வாரத்தோடு ஒப்பிடும்பொழுது 19.8 விகிதம் அதிகமாகும்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி 89,243 பேரின் மரணச் சான்றிதழ்களில் அவர்கள் உயிரிழந்தது கோவிட் தொற்றின் காரணமாக என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பிரித்தானியா மேலும் 33,355 தொற்றுக்களை பதிவு செய்ததன் காரணமாக மொத்த கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 3,466,849 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை 15 ஜனவரி கிடைத்த தகவலின் படி புதிதாகத் தினமும் சராசரியாக 3,634 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதேவேளை ஜனவரி 14 ஆம் திகதி மொத்தம் 347,384 பேர் கோவிட் தொற்றின் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். 17 ஜனவரி 2021 அன்று வெளியிட்ட தகவலின் படி மொத்தம் 37,946 தற்பொழுது மருத்துவமனையில் கோவிட் தாக்கத்தின் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

18 ஜனவரி 2021 வெளியிட்ட தகவலின் படி இதுவரை 4,266,577 மில்லியன் பேருக்குத் முதல் தடுப்பு மருந்தும் 456,866 பேருக்கு இரண்டாவது தடுப்பு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
18 ஜனவரி 2021 ஆம் திகதியில் 3,916 பேர் சுவாசகருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பிரித்தனியாவில் ஜனவரி 15 ஆம் திகதி கிடைத்த தரவுகளின் படி ஒருவர் மற்றவருக்கு நோயைப் பரப்பும் ஆர் ரேட், 1.2 க்கும்
1.3 க்கும் இடையில் உள்ளது.
-ஈழம் ரஞ்சன்-