ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் ஆவார்.
05.06.1974 வித்தாகிய பொன்.சிவகுமாரனின் வீரவணக்க நினைவுநாள் நாளையாகும்.
சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. தமிழினப் படுகொலைகளும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால்- தமிழ் மக்களின் சுதந்திர இருப்புக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின.
இந்நிலையில் தான் – மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும்,
சிங்கள பேரினவாத அடக்குமுறையாளர்களின் பிடியிலிருந்து – தமிழினம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டான்.
யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் சயனைட் நஞ்சருந்தி 05.06.1974 மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவரே.
மறக்குமா நெஞ்சம்…