
ஊடகங்களில் பொதுவெளியில் எப்படி பேசவேண்டும்?
ஊடகவியலாளர்களை எப்படி மரியாதையோடும் பண்போடும் நடத்தவேண்டும்?
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு எப்படி தெளிவாக பதில் சொல்லவேண்டும்?
சக கட்சி உறுப்பினர்களை எப்படி மரியாதையாக பேசவேண்டும்?
இந்த நேர்காணல் முழுவதும் ரங்கா “அவர்களே” என்று மரியாதையாக பேசுகிறார் மாமனிதர் ரவிராஜ்!
முஸ்லிம் தலைவர்களையும் மலையக தலைவர்களையும் மக்களையும் அரவணைத்து பேசுகிறார் மாமனிதர் ரவிராஜ்!
தமிழ்த்தேசியத்தின் நிலைப்பாட்டை விடுதலைப்போராட்டத்தின் பார்வையில் இருந்து பேசுகிறார் மாமனிதர் ரவிராஜ்!
தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினாராக இருந்தும் கூட;
அதிகாரம் கையில் இருந்தும் கூட;
எந்தளவு பக்குவத்தோடும் தெளிவோடும் பேசுகிறார் மாமனிதர் ரவிராஜ்!!!
ஊடகங்களில் பேசும் போது சட்டத்தரணியாக பேசாது;
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக எத்துணை நேர்த்தியாக பேசுகிறார் பாருங்கள்!
பொதுவெளியில் பேசும் போது;
எப்படி பக்குவமாக கேள்விகளை ஒரு புன்னகையோடு கையாள்கிறார் ரவிராஜ்!!!
இன்று அரசியலில் ஈடுபடும் அத்தனைபேரும்;
மாமனிதர் ரவிராஜ்ஜிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
நேரம் இருந்தால் மாமனிதர் ரவிராஜ்ஜின் பேட்டிகளையும் பேச்சுக்களையும் தேடிப்பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி – தமிழ் பொடியன்