“கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்”

123

குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது. புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார். “எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்கொண்டிருந்தேன்”. சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி, புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி, பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார். தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி, “நான் யார் தெரியுமா!” என்றார். சிறுவன் சொன்னான். “தெரியுமே! நீங்கள்தான் கடவுளின் மனைவி!!” என்றான் ….

பெண் தலைமைத்துவ குடும்பத்தவரான கிளிநொச்சி மணியன் குளம் பகுதியில் வசிக்கும் கோகிலராசா சத்தியகலா தனது வாழ்வாதார தொழிலாக பூசணி செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

தற்போதைய கொரோனா அவசரகால நிலையால் தனது உற்பத்திகளை சந்தைப்படுத்த இயலாத சூழலில் நலன்விரும்பிகள் முகநூலில் இப்பெண்மணி எதிர்நோக்கும் சவால்களை பதிவிட்டிருந்தனர்.

“எமக்காக நாமாவோம்” அமைப்பு அவரின் உற்பத்தியை அவர் கூறிய விலையை கொடுத்து பெற்று வறியவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது .

“கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்”

– Priyamatha pious