சோறு தின்னு, சின்னஞ் சிறு கத பேசி, கிழப்பருவமெய்தி வீழ்ந்து மடிய, வேடிக்கை மனிதரை போல எனையுமா நினைத்தாய்?
திராவிட அரசியலால எங்க ஊர்கள்ல பல தலைமுறையா சொந்த குடும்ப-சாதி சண்டை வழக்க பாக்குறதுக்கு மட்டுமே வக்கீலுக்கு படிச்சு அழிஞ்சவன் பலபேரு.
முழிச்சுக்கிட்டோம், முதன்முதலா இனத்திற்காக பயணம் செய்ய துவங்கி இருக்கோம்.
முள்ளிவாய்க்காலும், சுபா முத்துக்குமாரும்தான் எனைச் செதுக்கினார்கள். எனது கூர்வாள் குத்திக் கிழிக்கும்வரை அதை தீட்டிக்கொண்டே இருப்பேன்.
நானாவது கொஞ்சம் விளம்பர பிரியன், இதையெல்லாம் வெளிக்காட்டி விளம்பரம் செய்வேன்.
ஆனால் எண்ணற்ற தோழர்கள் உலகமெங்கும் எவனுடைய கனவுக்கும் எட்டாத பதவிகளை அடைந்து விட்டார்கள்.
உங்கள் ஆரிய-திராவிட நரித்தன அரசியல் அவர்களின் உரோமத்தை கூட தொட முடியாது, பின்னர் எங்கே நீங்கள் அவர்களை மட்டுப்படுத்துவது?
சனாதன நீட் கல்வியோ, சோத்துக்கான திராவிட நாமக்கல் கோழிப்பண்ணை கல்வியோ.. அதையெல்லாம் உடைத்து உயர பறப்போம்.
நீங்கள் முதலாளித்துவத்தை எங்களின் குரல்வளையை நெறிக்க பயன்படுத்தினால்,
நாங்கள் அதே முதலாளித்துவத்தை உங்கள் கொட்டைகளை நசுக்க பிரயோகிப்போம்..
உங்கள் நரித்தன சுயநல அரசியல் செனைப்பன்னி மாறன்களைத்தான் பிரசவிக்கும்,
எங்கள் பொதுநலம்தான் எப்போதும் புலவர்களையும், தமிழரசன்களையும், போராளிகளையும் பிரசவிக்கும்.
எங்கள் விடுதலையை இனி உங்களால் தடுக்கவே முடியாது, அது இயற்கையின் விதி.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துல வீரப்பனோட நாட்டுத்துப்பாக்கி வெச்சு பயிற்சி செஞ்சவனை ஆபத்துன்னு நெனச்சி அழிச்சீங்க.
எங்க ஆளு ஐரோப்பிய முப்படைகளின் உயர்பதவிகளுக்கு போயிட்டான், ராஜா.
அட உலகுக்கே ஆயுதம் சப்ளை செய்யும் லாக்ஹீடு மார்ட்டினிலும், போயீங்கிலும், BAE சிஸ்டத்துலையும் எங்க ஆளு இருக்கான், ராஜா.
The ball is in our court. நாங்கள்தான் இனி நாள் குறிப்போம்.
நீங்கள் மக்களை திருட பிரஷாந்த் கிஷோரின் கார்ப்பரேட் கூலிப்படையை வைத்து ட்ரோல் மட்டும் செய்யுங்கள்.
(இந்த படிப்பு , போராளி சுபா. முத்துக்குமாருக்கு காணிக்கை)
– Krishna muththu