சம்மந்தரையும் சந்தித்தார் சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர்!

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் இன்று செவ்வாய்க்கிழமை (28) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா சம்பந்தன் அவர்களை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளர்.

குறித்த சந்திப்பில் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை தொடர்பாகவும், அடிப்படை மனித உரிமைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடியாதகவும் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் குறிப்பாக இம்முறை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் மற்றும் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பிலும் அரசியல் சாசனம் தொடர்பாக தாம் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை அரசாங்கம் இதுவரைகாலமும் பல ஒப்பந்தங்களை மீறி செயற்பட்டுவருவதாக தெரிவித்த அவர் அதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்பதை தாம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார் .