தமிழ் மக்கள் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசிய தரப்பில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படுவதற்கு தயாராக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் தமிழ் தேசிய வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்த சாதகமான நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
முதலில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்தோடு அதற்கப்பால் சென்று சில தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தங்களுடைய வாக்குகளை அத்திருக்கின்றார்கள் அந்த கட்சிகளும் பிரதிநிதித்துவங்களை பெற்றிருக்கின்றன.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிகப்படியாக 9 ஆசனங்கள் தெரிவாகியிருக்கின்றன. தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது மக்கள் இவ்விதமாக வழங்கிய ஆணையை நாம் மதிக்கின்றோம் நமது அரசியல் இயக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. நாம் மக்களுக்காக அவர்களின் அபிலாசைகளை நியாயமான முறையில் மீளப்பெற முடியாத வகையில் பெற்றுக்கொடுப்பதே இலக்காக கொண்டு இருக்கின்றோம்.
அதற்காக நாம் பல்வேறு கருமங்களை பல்வேறு தரங்களில் முன்னெடுத்து இருக்கின்றோம். முன்னெடுக்கவும் உள்ளோம். நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் அதற்காக எமது மக்கள் ஆணை வழங்கி இருக்கின்றார்கள். அகவே கூட்டமைப்பிற்கு லெளியே தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்காகவே செயற்படவுள்ளார்கள். அவ்வாறாயின் அவர்களும் எம்முடன் ஒற்றுமையாக பயணிக்க முடியும்.
மக்களுக்காக ஒன்றாகபயணிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை எமது மக்களுக்காக நாம் தமிழ்தேசிய தரப்பில் உள்ள ஏனைய தரப்பினருடன் இணைந்து பயணிப்பதற்கு தயாராகவே உள்ளோம். ஒற்றுமை அவசியம் அது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அவர்களின் விடயங்களை பிரிந்து நின்று கையால்வதையும் விடவும் ஒன்றுபட்டு முன்னெடுப்பது சிறந்தது ஆகவே எமது மக்களுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை நாமும் தயாராக இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.