நினைவேந்தலுக்கு தடை,முள்ளிவாய்காலில் உறுதி எடுப்பவர்கள் முன்னிற்பார்களா!

178

செஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த புதுக்குடியிருப்பு காவல்துறையினர் உறவுகளுக்கு தடை விதித்துள்ளனர்.அதனையும் மீறி நடாத்தினால் பங்குபெற்றுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்

முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த நாளினை நினைவுகூர்ந்து வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் வருடந்தோறும் நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தது.

இம்முறையும் நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததையடுத்து ஏற்பாட்டாளர்களான ஈசன் மற்றும் ரூபன் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு காவல்துறையினர், “நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது” என எச்சரிக்கை விடுத்து பயமுறுத்தி கண்டிப்பாக தெரிவித்துள்ளனர்.

இதனால்அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன்,காவல்துறையினர்புலனாய்வுதுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.முள்ளிவாய்க்காலில் உறுதி எடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் விக்கினேஸ்வரன்,கஜேந்திரகுமார்,கஜேந்திரன் ஆகியோர் இதற்கு முன்னிலை வகித்து நினைவேந்தல்களை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்,இதை இங்கே இப்போது தவிர்த்துவிட்டு சிறிலங்கா பாராளுமன்றம்,ஜெனிவா சென்று எதுவும் ஆக போவதில்லை.