கிளிநொச்சி யாழ் தமிழரசுகட்சி வேட்பாளர் சிறிதரன் மஞ்சள் சட்டையுடன் தனது முதலாவது வாக்கை செலுத்தியுள்ளார்.அவரின் கணக்குபடி இன்னும் 74 வாக்குகள் செலுத்த வேண்டியுள்ளது.அதை எப்படி செலுத்த போகின்றார் என்பதை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.அடுத்து என்ன கலர் சட்டை? என்ன கலர் மாஸ்க்? எப்படி செலுத்த போகிறார் எல்லாம் சஸ்பென்ஸ்.
கடந்த தேர்தல்களில் 75 வாக்குகளை போட்டு தமிழரசு – கூட்டமைப்பு 22 ஆசனங்களை பெற சிறிதரன் உதவியதாக அண்மையில் பேட்டி ஒன்றில் பெருமையாக குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.அவரின் கடின உழைப்பை வியந்து அவருக்கு விருதுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று சாணக்கியபீடம் பரிந்துரைத்துள்ளது..