சிங்களத்தின் மனோநிலையை புரிந்து கொண்டவா் தலைவா் பிரபாகரன்…

192

70 ஆண்டுகால சுதந்திர இலங்கையில் சிங்கள மனோநிலையை சரியாக புரிந்து கொண்ட ஒரே தலைவர் பிரபாகரன் மட்டுமே…!

அவரின் எண்ணங்களில் சொல்லுவது என்றால்

சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப் போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடவில்லை . இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்ந்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்தும் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது.தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது

உண்மையை சொன்னால் சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழ்ந்தால் ஒழிய இந்த இலங்கை தீவில் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் ஒரு போதும் கிட்ட போவதில்லை…

இன்றைய நாளுக்குரிய செய்தி இது தான்.

தகவல் ராஐ் ஈழம்