உறுதியானது சுமந்திரனின் தோல்வி,சக வேட்பாளர்களால் ஒதுக்கப்படும் அவல நிலை

86

சுமந்திரனுக்கு ஏற்படும் பரிதாபநிலை?

தமிழ் மக்களுக்கு எதிரானவர்களுக்கு தன்னால் ஆதரவு கோர முடியாது என்று தமிழரசுக்கட்சி வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கூறுகிறார்.

சுமந்திரனுடன் கூடச் சென்றால் தனக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என சுமந்திரனின் விசுவாசியான ஆர்னோல்ட்டே சுமந்திரனை தவிர்க்கிறார்.

சிறீதரன் இன்னும் ஒருபடி மேலே சென்று “ சுமந்திரனுடன் சென்றால் தோல்வி வரும் என்றால் அதை ஏற்க தயார்” என்று கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில், சுமந்திரன் தோல்வி அடையப் போகிறார் என்பதை அவரது கட்சிக்காரர்களே வெளிப்படையாக கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவேன் என்று திமிராக பேட்டியளித்த சுமந்திரனுக்கு தன் கட்சிக்காரர்களாலேயே இப்படி ஒரு நிலை வரும் என நிச்சயம் எதிர் பார்த்திருக்கமாட்டார்.

ஆனால் இதைவிட சுமந்திரனுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொடுக்கப் போகிறார்கள்.

ஆம். சுமந்திரனுக்கு வாக்களிக்கக்கூடாது என அவர்கள் தமிழ் மக்களிடம் கோரப் போகிறார்கள்.

எனவே இனி சுமந்திரனை மகிந்த ராஜபக்சா மட்டுமல்ல இந்திய தூதுவராலும் காப்பாற்ற முடியாது.

இவை எல்லாம் தெரிந்தும் எப்படி சிலரால் சுமந்திரனை புகழ்ந்து பதிவுகள் இட முடிகிறது என நீங்கள் யோசிக்கலாம்.

ஆம். அவர்கள் செத்த மாட்டில் இருந்து உண்ணி கழருவதுபோல் சுமந்திரன் தோல்வி அடைந்தவுடன் விலகி விடுவார்கள். இது சுமதிரனுக்கும் தெரியும்.

நன்றி – Tholar Balan