தமிழ் தேசியக் கட்சிகளின் முக்கிய அறிவிப்பு இன்று!

78

தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் இன்று வியாழக்கிழமை முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் கூடிய தமிழ்த் தேசிய அணிகள் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் நேற்று மாலை கலந்துரையாடியிருந்தன.

இதன் போது இன்றையதினம் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பான நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் அந்த கட்டளையின் பின்னர் இன்றையதினமே மீண்டும் கூடுவதற்கும் தீர்மானித்துள்ளன.

இவ்வாறு இன்றையதினம் கூடுகின்ற போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு அதன் பின்னர் அதனை ஊடகங்கள் மூலமாக பகிரங்கப்படுத்தப்படுமென்றும் இக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.