அருட்தந்தை எஸ்.எம். செல்வரட்ணம் அவர்களால் தமது சொந்த முயற்சியினால் வெளிநாடுகளிற்கு சென்று விரிவுரைகளை நடத்தி அதிலே சேமித்த பணத்தை கொண்டு சுமார் 58 இலட்சம் ரூபா பெறுமதியான ultrasound scanner இயந்திரத்தினை யாழ் போதனா வைத்தியசாலை சுவாசத்தொகுதி பிரிவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்நிகழவினை வைத்தியசாலைநலன்புரிச்சங்க பொருளாளர் வைத்திய நிபுணர் பிரேமகிருஸ்ணா அவர்கள் ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்விலே போதனா வைத்தியசாலை சுவாசத்தொகுதி வைத்தியநிபுணர் ஆதவன் மற்றும் வைத்தியசாலை நலன்புரிச்சங்க செயளாளர் மற்றும் தாதிய பரிபாலகர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலமைகளில் இவ்வாறான நல்லுள்ளம் படைந்த இவர்களைப் போன்ற கொடையாளிகளுக்கு வைத்தியசாலை சமூகத்தின் சார்பிலே தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.