வீதிக்கு வந்த வீடு,மீன்காரரிடம் அரசியல் தஞ்சம்…

343

தேசியப்பட்டியல் யாருக்கு? இரண்டு தரப்பாக தமிழரசுக்கட்சிக்குள் இழுபறி
இதன் தொடராக அவசரமாக இன்று யாழ்ப்பாணத்தில் கூடுகின்ற தமிழரசுக்கட்சியினர் நாளை மத்திய குழுவை கூட்டி இரா.சம்பந்தன், சுமந்திரன், சிறீதரன், கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோரை தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைக்குத் தயாராகியிருப்பதாக பெயர் குறிப்பிடவிரும்பாத தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
இதனிடையே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்துவதற்கு தமிழரசுக்கட்சியின் குழு ஒன்று இன்று நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தெரியவருகிறது.

அதேபோல தமிழ் தேசியக் கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தாவுடனும் பேச்சு நடத்த தமிழரசுகட்சியின் இளையவர்கள் தயாராகியிருப்பதாகவும் இன்று குறித்த சந்திப்பு இடம்பெற்றும் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழரசுக்கட்சியின் தலைமை மாற்றம் தொடர் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் நேற்று கிளிநொச்சி ஊடகவியலாளர் சந்தப்பில் சிவஞானம் சிறீதரன் அனைவரும் சேர்ந்து தன்னிடம் தலைமையை தந்தால் ஏற்று நடத்த தயார் என்று தெரிவித்திருந்தமையும் தமிழரசுகட்சியின் மூத்த தலைவர்களின் நடவடிக்கைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.