“வேற்றுமையைக் கோராமல் ஒற்றுமையைக் கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்”

79

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்க அதிபர் தேர்த
லில் வென்றுள்ளதையடுத்து உரையாற்றுகையில், “வேற்றுமையைக் கோராமல் ஒற்றுமையைக் கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்” என்று உறுதிய
ளித்துள்ளார். மேலும் “இது அமெரிக்கா ஒன்றிணையும் நேரம்” என்றும்
தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 3ஆம்திகதிஅமெரிக்க அதிபர் தேர்தல்நடந்துமுடிந்தது.
ஆனால் வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக
நடைபெற்றன.

வெற்றியைத் தீர்மானிக்கும் அதிமுக்கிய மாநிலங்களான
(Battleground states) பென்சில்வேனியா, ஜோர்ஜியா, அரிசோனா, நிவேடா,
வட கரோலினா போன்ற மாநிலங்களில் இழுபறி நீடித்ததால், ஜனநாயகக்
கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளரான
அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் பலத்த போட்டி நிலவியது.
இந்நிலையில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபர்
தேர்தலில் வெற்றி பெற தேவைப்படும் 270 இடங்களை விட கூடுதலாக 9
இடங்களில் அவர் முன்னிலை பெற்றார்.
மேலும் பென்சில்வேனியாவில் சனிக்கிழமை மாலையில் வாக்கு
எண்ணிக்கை முடிவில், பைடனுக்கு சாதகமாக வெற்றி வாய்ப்பு உறுதியாகி
யுள்ளது.
அதே நேரம், ஜோ பைடனின் அரசில், இந்திய வம்சாவளியைச்
சேர்ந்த கறுப்பின பெண்ணான கமலா ஹாரிஸ், முதல் துணை அதிபராக
தெரிவாகியுள்ளார்.
தனது தேர்தல் வெற்றி குறித்து உரையாற்றிய ஜோ பைடன்,
“இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர், நீங்கள் என் மீது
வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்று
மையை கோராமல்,ஒற்றுமையைக் கோரும் ஒரு அதிபராக நான்இருப்பேன்.
சிவப்பு நிற மாகாணங்கள், நீல நிற மாகாணங்கள் என்றில்லாமல், பல
மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன்.

நான் இந்த பதவிக்குவந்ததற்குகாரணம்,

அமெரிக்காவின்ஆன்மாவை மீட்டெடுக்கவும்,இந்த நாட்டின்முதுகெலும்பானநடுத்தரவர்க்க மக்களை மறுகட்டமைக்கவும்,
மீண்டும் அமெரிக்காவை அனைவரும் மதிக்கும்படியும், நாட்டில் ஒற்று
மையை உருவாக்கவும்தான். எனது இந்த நோக்கத்திற்காக எனக்கு வாக்க
ளித்த மக்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். ஒவ்
வொருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கசப்புகளை ஒதுக்கி
வைத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வோம். நமது எதிர்த்தரப்பினரை
எதிரிகளாக நடத்துவதை நிறுத்துவோம். எனது முதல் பணி கொரோனா
வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதுதான்.” என்றார்.
இதைத் தொடர்ந்து கமலா ஹாரீஸ் தனது உரையில், “நீங்கள் நம்பி
க்கையை தெரிவு செய்தீர்கள். ஒற்றுமையை, கண்ணியத்தை, அறிவியலை,
உண்மையை தெரிவு செய்தீர்கள். அதனால் நீங்கள் பைடனை தெரிவு செய்
தீர்கள்” என்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பைடன்
முறைப்படி பதவியேற்பார். தற்போது பைடனுக்கு 77 வயதாகிறது. மிக
அதிக வயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பெருமை அவருக்கு
கிடைக்க உள்ளது.
அதே நேரம், வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு உலகத் தலைவர்கள்
வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்
சாட்டியுள்ள டிரம்ப் தரப்பு, பல மாகாணங்களில் வழக்கு தொடுத்துள்ளது.
ஏற்கனவே அவற்றுள் சில வழக்குகள் தள்ளுபடியாகியுள்ளன என்பதும் குறி
ப்பிடத்தக்கது.