சீனாவின் அருகில் உள்ள நகரத்தைக் கைப்பற்றியதாக ஆயுதக் குழுவினர் அறிவிப்பு

05-11-2023

0

18

சீனாவிற்கு அருகில் உள்ள நகரத்தை கடும் சமரின் பின்னர் மியான்மார் அரசிடம் இருந்து ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவமானது 2021இல் இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய அரசுக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

 

சீனாவின் யுனைன் மாநிலத்திற்கு அருகில் உள்ள இந்த நகரம் சீனாவிற்கும் மியான்மாருக்கும் இடையிலான 1.8 பில்லியன் டொலர் வர்த்தகத்தின் முக்கிய பாதையாகும்.

 

மியான்மாரின் வடக்குப் பகுதியில் உள்ள சான் மாநிலத்தின் கடந்த பல நாட்களாக அரச படையினருக்கும் 3 இனங்களைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் அந்தப் பகுதியில் இருந்து அரச படையினர் வெளியேறியதாக மியான்மரின் அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

தாம் வாழும் பிரதேசத்திற்கு சுயாட்சி வேண்டி இந்த இனங்களைச் சேர்ந்த குழுவினர் போராடி வருகின்றனர். அவர்களில் ஏறத்தாள 15000 படையினர் உள்ளதாக நம்பப்படுகின்றது. அண்மைக்காலங்களாக இடம்பெற்று வரும் சண்டைகளில் தாம் சீனாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான பல காவல் நிலைகள் மற்றும் வீதிகளை கைப்பற்றியுள்ளதாக இந்தக் குழுக்கள் தெரிவித்துள்ளன.