முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பம்

20-11-2023

0

25

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

 

அகழ்வுப்பணி தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில்,அகழ்வுப் பணி இன்று 20 ஆம் திகதி காலை8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

 

புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது.  இம்முறை அகழ்வுப்பணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளோம்.

 

இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்திக் கொள்ள கூடியதாகக் இருக்கும். நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருககிறது. அந்த நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுப்பணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும்” - என்றார்.