உலகக்கோப்பை-இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா,நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

14-11-2023

0

9

“இந்தியா எந்தளவு வலுவான அணி என்பதை அறிவோம்- நியூசிலாந்து வீரர் கருத்து

நடப்பு உலகக்கோப்பையின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளன. முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

முதல் அரையிறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் ஒரு பெரிய மோதலுக்காக தயாராகி வருகின்றனர். சொந்த மைதானத்தில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும், இந்தியாவை வீழ்த்தும் முனைப்போடு களமிறங்கவிருப்பதாக நியூசிலாந்து தொடக்க வீரர் டெவான் கான்வே தெரிவித்துள்ளார்.

 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி மோதல் குறித்து பேசியிருக்கும் டெவான் கான்வே, “இந்தியா எந்தளவு வலுவான அணியாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் ஒரு அணியாக மொமண்ட்டை எடுத்துச்செல்கிறார்கள். ஆனால் நாங்கள் அந்த சவாலை எதிர்நோக்குகிறோம். அரையிறுதியில் போட்டியை நடத்தும் நாட்டிற்கு எதிராக விளையாடுவதில் அதிக உற்சாகத்துடன் இருக்கிறோம். அவர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றாலும், அந்த சவாலை எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம்" என்றார்.