இஸ்ரேல் கமாஸ் போர்: "இனப்படுகொலையை பொறுத்துக் கொள்ள முடியாது"

07-11-2023

இஸ்ரேலில் இருந்து தூதுவர்களை திரும்ப அழைக்கும் நாடுகள்

தென்னாபிரிக்கா மற்றும் சாட் நாடுகள் இரண்டும் இஸ்ரேலில் இருந்து தங்கள் இராஜதந்திரிகளை திரும்பப் பெற்றதாக  தென்னாபிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பாண்டோர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

 

"குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதில் தென்னாபிரிக்கா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது" என்று பாண்டோர் மேலும் கூறியுள்ளார்.

 

தென்னாபிரிக்காவிற்கு இஸ்ரேலில் ஒரு தூதுவர் இல்லை ஆனால் மூன்று இராஜதந்திரிகள் உள்ளனர். "சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் நடக்கும் இனப்படுகொலையை பொறுத்துக் கொள்ள முடியாது" என்று தென்னாபிரிக்க அதிபர் கும்புட்ஸோ நட்ஷாவேனியை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது.

 

கடந்த மார்ச் மாதம், தென்னாபிரிக்காவின் நாடாளுமன்றம் இஸ்ரேலுடனான தனது உறவை குறைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதேவேளை சாட் நாடும் நவம்பர் 4 அன்று   இஸ்ரேலில் உள்ள தூதுவர்களை திரும்ப அழைத்ததாக CNN தெரிவித்துள்ளது.

 

''பாலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும் போர் நிறுத்தத்திற்கு சாட் நாடுகள்  அழைப்பு விடுக்கிறது" என்று அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.