வடக்கு கிழக்கில் யங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் - ஐநா கவலை
02-12-2023
0
47

இலங்கையின் வடக்கு கிழக்கில் பயங்கரவாததடைச்சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது மனித உரிமைகளை மீறும் சட்டத்தினை பயன்படுத்துவதை நிறுத்திவைப்பது குறித்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு மாறானது எனவும் ஐநா தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடவேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.